’நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்...’: தேசிய விருது குறித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
‘நீங்கள் நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
‘நீங்கள் நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்’ என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமா 10 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் 5 விருதுகளைப் பெற்று அசத்தியுள்ளது.
இதையும் படிக்க: 68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று
Advertisement
Advertisement
இந்நிலையில், ’சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அக்குறிப்பில், ’ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்... ஒருநாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.. நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின் அந்த நாள் வந்துள்ளது..’ எனத் தெரிவித்ததுடன் குடும்பத்தினருக்கும் ‘சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.