பிரபல டிவி நடிகை மருத்துவமனையில் அனுமதி
பிரபல டிவி நடிகை ஸ்ரீநிதி மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிரபல டிவி நடிகை ஸ்ரீநிதி மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிதி. பின்னர் ஜி தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, புதுப் புது அர்த்தங்கள் தொடர்களில் நாயகியாக நடித்தார்.
இந்த நிலையில் கடந்த சிம்பு தன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அவரது வீட்டின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு தன்னை திருமணம் செய்துகொள்வதற்காகவே திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம் - ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்த தகவல்
இதன் காரணமாக அவர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மன அழுத்தத்தில் இருப்பதாக அவரது அம்மா தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ரீநிதி மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.