முகப்பு
செய்திகள்

நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கம்

தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 14 நவம்பர் 2022, 1:03 pm IST
பகிர்:

தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

கோலிவுட்டில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் கார்த்தி. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் அவர் நடித்து வருகிறார். 

Advertisement

Advertisement

இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் முகநூல் குழுவுடன் இணைந்து அதை மீட்டெடுக்க முயர்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கார்த்தியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.