தனுஷின் 'நானே வருவேன்': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
நானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என தமிழின் முக்கியமான படங்களைக் கொடுத்த செல்வராகவன் - தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பிறகு கைகோர்த்த படம் நானே வருவேன்.
தனுஷ் கதை எழுதியிருந்த இந்தப் படத்தை செல்வராகன் இயக்கியிருந்தார். கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்திருந்தார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ''எனது இளவரசியே...'' - மகளின் பிறந்தநாளில் பிரின்ஸ்' சிவகார்த்திகேயன் பகிர்ந்த புகைப்படம்
ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் பொன்னியின் செல்வனுடன் வெளியானதால் கவனம் பெறாமல் போனது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.