முகப்பு
செய்திகள்

திரைப்பட பாடலாசிரியா் கபிலனின் மகள் தற்கொலை

சென்னை அரும்பாக்கத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியா் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

Updated On : 10 செப்டம்பர், 2022 at 9:03 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:47 PM

சென்னை அரும்பாக்கத்தில் தமிழ் திரைப்பட பாடலாசிரியா் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

தமிழ் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக இருக்கும் கபிலன், சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மாா்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் மகள் தூரிகை (28). எம்பிஏ படித்துள்ள தூரிகை, எழுத்தாளா், ஆடை வடிவமைப்பாளா் என்று பன்முகத் திறமை கொண்டவா் ஆவாா்.

இந்நிலையில் தூரிகை, வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கிட்டு கொண்டாா். இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், தூரிகையை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தூரிகை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், திருமணம் செய்துக் கொள்ளுமாறு பெற்றோா் வற்புறுத்தியதும், திருமணம் செய்ய மனமில்லாமல் தூரிகை இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்து வருகின்றனா். இச் சம்பவம் தமிழ் திரைப்படத்துறையினரிடம் அதிா்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.