விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த அப்டேட்
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய்சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். குரங்கு பொம்மை இயக்குநர் நிதிலன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் 50வது படம் படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இது குறித்து, “விஜய் சேதுபதியின் 50வது படம் இதுதான் என்பது எங்களுக்கும் முதலில் தெரியாது. இந்தப் படம் பழிவாங்கும் கதையாக உருவாகி வருகிறது. இதில் இரண்டு புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 85 நாள்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இதில் 50நாள்கள் முடிந்து விட்டது. இன்னும் 10 நாளில் விஜய் சேதுபதியின் பகுதி முடிந்துவிடும்” என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.