முகப்பு
செய்திகள்

அதிகரிக்கும் காட்சிகள்: தொடரும் ‘பதான்’ டிக்கெட் கட்டண சலுகை!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டண சலுகை மேலும் இரண்டு நாள்கள் தொடர்ந்துள்ளது. 

Updated On : 18 பிப்ரவரி 2023, 5:54 pm IST
பகிர்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டண சலுகை மேலும் இரண்டு நாள்களுக்குத் தொடர்ந்துள்ளது. 

பதான் படம் கடந்த மாதம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக ரூ. 981 கோடி வசூலித்துள்ளது. 

இந்தியாவில் மட்டும் ரூ. 508 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையை பதான் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய படம் - ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2. 

Advertisement

Advertisement

முன்னதாக, இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐனாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் மற்றும் வேறு சில திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ. 110 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில், பதான் படத்துக்கு அதிகளவில் ரசிகர்கள் குவிந்து வருவதால் சனி, ஞாயிறு என மேலும் இரண்டு நாள்களுக்கு ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஷாருக் கானின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இந்த டிக்கெட் சலுகையால் இந்தியா முழுக்க பதான் படத்துக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியான பிறகும் பதான் படத்தின் வசூல் குறையாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments