செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து விலகிய 'ஐஸ்வர்யா': அடுத்து யார்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நிறைய நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை 3 பேரும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் 3 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி, பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து விலகிவுள்ளதால், ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு அடுத்து நடிக்கவிருப்பது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே காயத்ரியே மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பானிஷ் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் பார்சிலோனா!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் வெளியீட்டுத் தேதி!

மோடி பயந்துவிட்டார்; அதனால்தான் இன்று அவைக்கு வரவில்லை: பிரியங்கா காந்தி

ரெட்மி நோட் 15 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!

SCROLL FOR NEXT