இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2010இல் வெளியான ‘வம்சம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் அருள்நிதி. பின்னர் மௌன குரு, டீமாண்டி காலணி என தனக்கென ஒரு பாதையை ஒருவாக்கி நடித்து வருகிறார் அருள்நிதி. கடந்தாண்டு டீ பிளாக், தேஜாவு, டைரி போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதையும் படிக்க: ‘லியோ’ படத்திற்காக 30 புதிய தோற்றங்களை முயற்சித்த விஜய்!
தற்போது திருவின் குரல், டீமாண்டி காலணி-2, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கழுவேத்தி மூர்க்கன் படத்தினை ஜெய்ந்தி அம்பேத்கர் தயாரிக்க சை கௌதமராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
சார்பட்டா பரம்பரை நாயகி துஷாரா விஜயன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். முனிஷ்காந்த், சந்தோஷ் பிரதாப், ராஜ சிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் துஷாரா வங்கி ஊழியராக நடிக்கிறார். படத்தின் தலைப்புக்கேற்றார் போல கொடிய தண்டனையை பற்றி படம் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.