தனிப்பட்ட வாழ்க்கையை பேச யாருக்கும் உரிமையில்லை: ரச்சிதா ஆவேசம்!
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆவேசமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆவேசமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமியின் முன்னாள் கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7-ல் வைல்டு கார்டு போட்டியாளராக சென்றுள்ளார். சக போட்டியாளர்கள் தினேஷ் - ரச்சிதா திருமணம் குறித்த பேச திட்டமிட்ட விடியோ வெளியானது.
இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சி ஆவசமடைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையும், தகுதியும் இல்லை. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்களுடைய கேம் யுக்திக்கு என் பெயரை பயன்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: காதலியை கரம் பிடிக்கும் சுந்தரி சீரியல் நடிகர்!
ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.