படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படத் தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படத் தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார்.
இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை லோகேஷ் இயக்கியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ,லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவரே தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் G-squad என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.