அர்ஜுன் தாஸின் புதிய படத்துக்கு பூஜை!
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க | ரூ.500 கோடியை கடந்த ஜெயிலர் வசூல்!
Advertisement
Advertisement
ஜெம்ப்ரியோ பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது.
இந்த படத்தில் நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகரும், முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், காளி வெங்கட் ஆகியோர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு - பி.எம். ராஜ்குமார்
படத்தொகுப்பு - ஜி.கே. பிரசன்னா
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.