முகப்பு
செய்திகள்

மனைவி போலிஸில் புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!

சின்னத்திரை நடிகரான ராகுல் ரவி, அவரது மனைவி காவல் துறையினரிடம் அளித்த புகாரால் தலைமறைவாகி இருக்கிறார்.

Updated On : 15 டிசம்பர் 2023, 6:01 pm IST
பகிர்:

சின்னத்திரை நடிகரான ராகுல் ரவி, அவரது மனைவி காவல் துறையினரிடம் அளித்த புகாரால் தலைமறைவாகி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராகுல் ரவி. இவர் தொடர்ந்து சாக்லெட் தொடரில் நடித்தார். கரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கண்ணான கண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடந்த 2020-ல் ராகுல் ரவி தான் காதலித்த லட்சுமி நாயர் எனபவரை திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

Advertisement

ராகுல் ரவி.

இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், திருமணத்துக்குப் பிறகு ராகுல் ரவி மற்றும் லட்சுமி நாயரின் ரீல்ஸ் மற்றும் விடியோக்கள் டிரெண்டாகியது.

இதைத் தொடர்ந்து, ராகுல் ரவி மற்றும் லட்சுமி நாயருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், ராகுல் ரவிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லட்சுமி நாயர்,  ராகுல் ரவி மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே ராகுல் ரவி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிய இருந்த நிலையில், முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதனால் இவர் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments