முகப்பு
செய்திகள்

டிஆர்பி பட்டியலில் பின்னுக்குச் செல்லும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்!

சின்னத் திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் 2 இடங்கள் பின் தங்கியுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி 2023, 7:13 pm IST
பகிர்:

சின்னத் திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் 2 இடங்கள் பின் தங்கியுள்ளது. 

பல்வேறு இல்லங்களின் தொலைக்காட்சி நேரங்களை சின்னத் திரை தொடர்கள் ஆக்கிரமித்துள்ளன. பல்வேறு தொலைக்காட்சிகளில் தற்போது வகைவகையான தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

குடும்பத் தலைவிகளை மட்டும் குறிவைக்காமல், தற்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்றவாறு தற்போது சின்னத் திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இளம் தலைமுறையினரும் சின்னத் திரை தொடர்களின் வரும் பாத்திரங்களைக் கொண்டு மீம்ஸ்களாக தங்கள் கருத்துகளை கேலியாகத் தெரிவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு இளம் தலைமுறையினரையும் தற்கால தொடர்கள் கவர்ந்துள்ளன. 

அதிக அளவில் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்களை டிஆர்பி பட்டியலில் வரிசைப்படுத்தப்படும். இந்தப் பட்டியல் வாரமொருமுறை வெளியிடப்படும். 

இம்முறை வெளியான டிஆர்பி பட்டியலில் பாக்கியலட்சுமி தொடர் 2 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்தது. தற்போது 7.44 டிஆர்பி புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 6.28 புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. 

டிஆர்பி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சன் தொலைக்காட்சியின் கயல் (10.58), வானத்தைப் போல (10.42), சுந்தரி (9.26) ஆகிய தொடர்கள் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments