பிரபல மலையாள தொகுப்பாளினி சுபி சுரேஷ் காலமானர்!
பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ்(42) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சுபி சுரேஷ்(42) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
சின்னதிரையில் தொகுப்பாளினியாக இருந்து வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகையாகப் பயணித்தவர். நகைச்சுவையுடன் இவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது.
Advertisement
Advertisement
அவரின் நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதன்மூலம் சுபி சுரேஸுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.
2006-ம் ஆண்டு இயக்குனர் ராஜசேனன் இயக்கத்தில் உருவான கனக சிம்ஹாசனம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது என்ட்ரியை பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து பஞ்சவர்ண தந்தை, ஆண்குட்டி, ட்ராமா என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படிக்க: ஓடிடியில் வெளியானது ‘வாரிசு’
எர்ணாகுளம், திரிபுனித்துராவில் பிறந்த இவர் சினிமாலா என்று நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
சமீப காலமாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மறைவு மலையாள திரையுலகத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.