மாவீரன் - மிகுந்த நம்பிக்கையில் சிவகார்த்திகேயன்!
மாவீரன் திரைப்படம் வெற்றிப்படமாக அமையும் என மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறாராம் சிவகாரத்திகேயன்!
மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இந்திய அளவில் முதலிடம் பிடித்த வீரன்!
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படம் கண்டிப்பாக தனக்கு வெற்றிப்படமாக அமையும் என நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த நம்பிக்கையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கிலும் சிவகார்த்திகேயன் படத்திற்கு வரவேற்பு இருப்பதால், தமிழ் - தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் இப்படம் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.