நிஜத்திலும் தம்பதிகளாக மாறிய சின்னத்திரை நடிகர்கள்!
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரிட்டோ மனோ, ராஜா ராணி -2 தொடரில் நடித்த சந்தியாவை திருமணம் செய்துகொண்டார்.
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரிட்டோ மனோ, ராஜா ராணி -2 தொடரில் நடித்த சந்தியாவை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து தொடரில் தம்பதிகளாக நடித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் பிரிட்டோ மனோ, சந்தியா ராமச்சந்திரன் தம்பதிகளாக நடித்து வருகின்றனர்.
Advertisement
இவர்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில், தற்போது திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் நடைபெற்ற இவர்கள் திருமணத்துக்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரிட்டோவின் நண்பரும் சின்னத்துரை நடிகருமான சித்து, இது குறித்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டு தமதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டோ மனோ, சந்தியா ராமச்சந்திரன் சேர்ந்து நடிக்கும் தொடரும், அதில் அவர்கள் இருவரின் காட்சிகளும் பல்வேறு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரிட்டோ மனோ. அதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
மாடலிங் துறையில் பணியாற்றிவந்த சந்தியா ராமச்சந்திரன், கோகுலத்தில் சீதை தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்துள்ளார். சனூன், பேய காணோம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர்கள் இருவரும் தவமாய் தவமிருந்து தொடரில் கணவன் - மனைவியாக நடித்து வருகின்றனர். தற்போது நிஜ வாழ்விலும் இருவரும் கணவன் - மனைவியாகியுள்ளனர்.