மாளவிகா மோகனனுக்கு 5 மணி நேர மேக்கப்.. இந்தப் படத்திற்கா?
தனக்கு தினமும் 5 மணி நேரம் மேக்கப் போடப்படுவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
தனக்கு தினமும் 5 மணி நேரம் மேக்கப் போடப்படுவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் சூர்யா?
விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.
மேலும், நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாளவிகா மோகனன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தங்கலானுக்காக தினமும் 4 - 5 மணி நேரம் மேக்கப் மற்றும் உடையலங்காரத்திற்கு தேவைப்படும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இவ்வளவு நேரம் அசையாமல் இருப்பதும் சவாலாக இருக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.