ரூ.20 கோடி சம்பளம்! பிரதீப் ரங்கநாதனைக் கைவிட்ட கமல்?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.
தற்போது, ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இதையும் படிக்க: நடிகராகும் இயக்குநர் சீனு ராமசாமி!
Advertisement
Advertisement
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடேவின் மாபெரும் வெற்றிக்குப் பின் நாயகனாக நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு ராஜ்கமல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இந்தப் படத்தின் தயாரிப்பில் இருந்து விலகிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்!
லவ் டுடே திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தாலும் தன் இரண்டாவது படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் ரூ.20 கோடி வரை தன் சம்பளத்தை உயர்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லவ் டுடே படத்தை இயக்கி, நடிக்க அவர் ரூ.1 கோடி சம்பளம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.