நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் சேரன்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் புதிய படத்தை இயக்க உள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் புதிய படத்தை இயக்க உள்ளார்.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கடைசியாக சேரன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு திருமணம் என்கிற படம் வெளியானது. அதன் பிறகு சேரன் எந்த படங்களையும் இயக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்த படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இது கிச்சா சுதீப் நடிக்கும் 47வது படம் ஆகும்.
Advertisement
Advertisement
கிச்சா சுதீப் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கத்தில் புதிய படம் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.