வில்லனாக நடிக்கும் 'பாவம் கணேசன்' தொடரின் நவீன்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நவீன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிகர் நவீன் வில்லனாக நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நவீன். பல பிரபலங்களின் குரலில் பேசி நடிப்பதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் பாவம் கணேசன் தொடரில் நாயகனாக நடிகர் நவீன் நடித்தார். அவ்வபோது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சூர்யாவின் சூரறைப் போற்று படத்தில் அப்துல் கலாம் பாத்திறத்திற்கு குரல் கொடுத்தவர் நவீன்தான்.
Advertisement
Advertisement
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அப்துல் கலாம் குரல் பேசி வென்றார்.
நவீன் தற்போது தாய் கிரியோஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய தொடரில் வில்லனாக நடிக்கவுள்ளார். நீ நான் காதல் என இந்தத் தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தெலுங்கில் வெற்றிபெற்ற நுவ்வு நேனு பிரேமா தொடரிம் மறுவுருவாக்கம்.
நடிகை சாய் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். இவர் கனா காணும் காலங்கள், ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர். தற்போது நீ நான் காதல் தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.