எதிர்நீச்சல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
எதிர்நீச்சல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல், இளம் வயதினரும் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.
டிஆர்பியில் பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் எப்போதும் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும். மாரிமுத்து மறைவுக்குப் பிறகு, இத்தொடரின் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் இத்தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இத்தொடரில் சத்யப்பிரியா, வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, கனிகா, மதுமிதா, விபுராமன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
விரைவில் மல்லி என்ற புதிய தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன் பாப் உள்ளிட்ட பிரபலங்கள் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால், எதிர்நீச்சல் தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 9.30 ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர், 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய நேர மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.