தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடிய ரித்திகா!
பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ரித்திகா தனது கணவருடன் தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடியுள்ளார்.
பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ரித்திகா தனது கணவருடன் தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. இவர் பாக்கியலட்சுமி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரித்திகா, தொடர்களை நடித்தார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, வினு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ரித்திகா, திருமணத்துக்குப் பிறகு இவர் நடித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார்.
இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிடும் இவர், தனது கணவருடன் தாஜ் மஹாலுக்குச் சென்று காதலர் நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை இண்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரித்திகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.