பிரபல தமிழ் நடிகைக்குத் திருமணம்!
தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமடைந்த நடிகை திருமணம் செய்துள்ளார்.
தமிழில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. தொடர்ந்து, லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி, இசை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
முக்கியமாக, மருதமலை படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளால் கவனிக்கப்பட்டவர்.
சில ஆண்டுகளாகத் தொழிலதிபர் ரக்ஷித் கேஜரிவாலைக் காதலித்து வந்த நிலையில், நேற்று (மார்ச்.12) இருவரும் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.