செய்திகள்

திருமணப் படத்தில் சினிமா காட்சிகள்... தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா!

நடிகை நயன்தாராவின் புதிய அறிக்கை....

DIN

திருமண ஆவணப்படத்திற்காக திரைப்பட காட்சிகளுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டதற்கு தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் ரசிகர்களிடம் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானது.

இதில், நானும் ரௌடிதான் படத்தின் 10 விநாடி நேரம் கொண்ட படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டிருந்த சூழலில், சம்பந்தப்பட்ட படத்தின் காட்சியை நெட்பிளிக்ஸ் பயன்படுத்தியுள்ளதால் தனுஷ் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இந்த நிலையில், நயன்தாரா தன் திருமணப் படத்தில் தான் நடித்த சினிமா படங்களின் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் நடிகர் ஷாருக்கான், உதயநிதி ஸ்டாலின், லைகா, வேல்ஸ் இண்டர்நேஷனல், ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அவர் நடித்த பிறமொழி தயாரிப்பு நிறுவனங்களையும் குறிப்பிட்டு நம் பயணம் என்றென்றும் தொடரும் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT