காதல் கதைகளில் கவனம் செலுத்தும் அதிதி ஷங்கர்!
காதல் கதைகளில் அதிதி ஷங்கர்....
நடிகை அதிதி ஷங்கர் காதல் கதைகளில் நடித்து வருகிறார்.
விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். தன் துறுதுறுப்பான பேச்சால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர்.
இறுதியாக, மாவீரன் படத்தில் நடித்திருந்தார். அப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படமானது. தற்போது, விஷ்ணுவரதன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நடிக்கிறார்.
Advertisement
Advertisement
அதேநேரம், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், ‘ஒன்ஸ் மோர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகனாக அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் முழுமையான காதல் கதையாகவே உருவாகிறது. இன்றைய தலைமுறையினரைக் கவரும் விதமாக காதல் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வருகிறாராம் நடிகை அதிதி ஷங்கர்!