நடிகர் அஜித்  
செய்திகள்

குட் பேட் அக்லி: தென்னிந்திய வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது யார்?

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

DIN

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.

அதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ ஃபிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருவதால் பொங்கலுக்கு படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாந்த இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

ஜெயபிரகாஷ் நாராயண் பூா்விக வீட்டைப் பாா்வையிட்டாா் குடியரசு துணைத் தலைவா்

SCROLL FOR NEXT