நடிகர் பிரேம்ஜி அமரன் கோட் திரைப்படத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. செப். 5 ஆம் தேதி உலகளவில் இப்படம் வெளியாகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் பெரிய ஆவலில் உள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் பிரேம்ஜி, “ கோட் படத்தை பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறையும் விசில் அடிப்பீர்கள். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படியான ஆச்சரியங்களைப் பார்த்திருக்க மாட்டீர்கள்.
அறிமுக காட்சியே அசத்தலாக இருக்கும். படத்தைப் பார்த்து முடித்ததும் என் அண்ணனிடம் (வெங்கட் பிரபு) கோட் உலகளவில் ரூ. 1500 கோடி வரை வசூலிக்கும் என சொன்னேன். பார்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.
பிரேமிஜியின் பேச்சைக் கேட்ட விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதாக உற்சாகமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.