ரூ. 300 கோடி வசூலித்த நரசிம்மா!
மகாவதார் நரசிம்மா வசூல்...
மகா அவதார் நரசிம்மா திரைப்படம் வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது.
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவான மகாவதாரம் நரசிம்மா இந்தியளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது.
இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகளின் தரம் கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருந்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இந்தியளவில் இப்படம் பேசப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தடுத்த அவதாரங்களையும் திரைப்படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?
mahavatar narsimha collected rs. 300 cr worldwide
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.