ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!
நடிகை கீர்த்தி ஷெட்டி நடிகர் கார்த்தி உடனான அனுபவம் குறித்து பேசியதாவது...
நடிகை கீர்த்தி ஷெட்டி கார்த்தி உடனான அனுபவம் குறித்து பேசும்போது மீம்ஸ்களில் வருவதுபோல், “நான் ஃபேனில் இருந்து ஏசி ஆகிவிட்டேன்” எனப் பேசினார்.
இவரது நேர்காணல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி உடன் கீர்த்தி ஷெட்டி வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் வரும் டிச.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கார்த்தி உடன் நடித்தது குறித்து தனது அனுபங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் கீர்த்தி ஷெட்டி பேசியதாவது:
பையா படம் மிகவும் பிடிக்கும்...
நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை. பையா படத்தை எத்தனை முறை பார்த்தேன் எனத் தெரியாது.
என் சிறிய வயதில், மங்களூரில் இருக்கும் எனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு நண்பர்கள் இல்லை, அதனால் வீட்டில் டிவி மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது.
அங்கிருந்த பையா படத்தைப் சிடியில் போட்டு நாள் முழுக்க பார்த்தேன். என்ன பிடித்தது எல்லாம் தெரியவில்லை. திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருந்தேன்.
கார்த்தி, தமன்னாவின் நடிப்பு க்யூட்டாக இருந்தது. பாடல்களும் பிடிக்கும்.
கார்த்தி சாரின் ஃபேன் அல்ல, ஏசி...
ஒருமுறை லிங்குசாமியிடம் கார்த்தியைப் பார்க்கலாம் எனக் கேட்டு காத்திருந்து நடக்கவில்லை. அதனால், மிகுந்த மனம் உடைந்தேன்.
பிறகு நதியா மேடம் எனக்காக கார்த்தி சாரிடம் ஃபேன் செய்து கொடுத்தார். நான் மிகப்பெரிய ரசிகை எனப் பேசினேன். அவரும் நன்றாகப் பேசினார்.
அடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு வா வாத்தியார் படப்பிடிப்பில் அவரே என்னிடம் வந்து, ‘நாம் பேசியிருக்கிறோமே ஞாபகம் இருக்கிறதா?’ எனக் கேட்டார்.
முதலில் அவருடன் நடிக்க பயமாக இருந்தது; அதேசமயம ஆர்வமாகவும் இருந்தது.
ஒன்று சொல்லுவேன். அது கிரிஞ்சாக இருக்கும். நான் இப்போது கார்த்தி சாரின் ஃபேனில் (ரசிகை) இருந்து ஏசியாக மாறிவிட்டேன் என்றார்.
Actress Keerthy Shetty, while talking about her experience with Karthi, said, as seen in memes, “I went from being a fan to being an AC.”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.