சிறை திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநருக்கு தயாரிப்பாளர் கார் வழங்கியுள்ளார்.
இயக்குநர் தமிழ் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம் சிறை. விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
காவலர்கள் பாதுகாப்பிலிருந்து தப்பிச்செல்லும் சிறைக்கைதியைக் குறித்த கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
சிறை திரைப்படம் டிச. 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
நிகழ்வின்போது, படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் லலித் குமார், படம் வெளியாகி வரவேற்பைப் பெறுவதற்கு முன்பே இயக்குநர் சுரேஷுக்கு கார் வழங்கி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன், ‘ஒரு தயாரிப்பாளர் தன் படத்தின் இயக்குநரை இப்படி கௌரவப்படுத்தியது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.
இப்படத்தில் இன்னொரு நாயகனாக நடித்த நடிகர் லேகே அக்ஷய் குமார் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.