செய்திகள்

காவலரா? ரௌடியா? எதிர்பார்ப்பைத் தூண்டும் மம்மூட்டி!

மம்மூட்டி - விநாயகன் படம் குறித்து...

DIN

நடிகர் மம்மூட்டியின் புதிய பட பெயர் போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் மம்மூட்டி - விநாயகன் நடித்துள்ள புதிய படத்தை துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது.

இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலகியதாகத் தகவல்.

இப்படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்மூட்டி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு களம்காவல் எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கான, போஸ்டர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காரணம், இப்படத்தில் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாகவோ, ரௌடியாகவோ நடித்திருக்கலாம் என்பதால் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் அவரை திரையில் காண்பது நல்ல அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT