செய்திகள்

சூர்யா இப்படி செய்திருக்கக் கூடாது: கௌதம் மேனன்!

இயக்குநர் கௌதம் மேனன் நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார்...

DIN

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சூர்யா மீதான வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் மம்மூட்டியை வைத்து இயக்கிய டோமினிக் திரைப்படம் வருகிற ஜன. 23 ஆம் தேதி வெளியாகிறது.

இதில், துப்பறியும் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கான, புரமோஷன்களில் கௌதம் மேனன் கலந்துகொண்டு படம் குறித்தும் தன் திரை அனுபவங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

அப்படி, நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கௌதம் வாசுதேவ் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சூர்யாதான். ஆனால், அவர் படத்திற்குள் வரவில்லை. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என அவருக்கு வெற்றிப்படங்களைக் கொடுத்தும் சூர்யா துருவ நட்சத்திரத்தில் இணையாதது பெரிய வருத்தத்தைக் கொடுத்தது.

அந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சூர்யாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்திருக்குமா? கண்டிப்பாக இல்லை. ஆனாலும், அவர் முடியாது என சொன்னதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

ருக்கு...🤞💖!

SCROLL FOR NEXT