முகப்பு
செய்திகள்

தற்காப்புக் கலை கற்கும் லோகேஷ் கனகராஜ்... ஏன் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை கற்று வருகிறாராம்....

Updated On : 14 ஜூன், 2025 at 3:34 PM
லோகேஷ் கனகராஜ்
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை கற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

இதற்கிடையே, லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறாராம். அண்மையில், படத்தின் பூஜை முடிந்திருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தற்காப்புக் கலை (martial arts) கற்று வருகிறாராம்.

படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ளதால் கதாபாத்திரம் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக லோகேஷ் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.