நடிகை மிருணாள் தாக்குர் அட்லியின் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி பாணியில் உருவாகவுள்ளதால் படப்பிடிப்பிலும் பல விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. தற்போது, படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்து வருகிறாராம். ஏற்கனவே, படத்தில் 5 நாயகிகள் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
தீபிகா படுகோன், மிருணாள் தாக்குர் உறுதியாகியிருக்கின்றனர். மேலும், நடிகை சமந்தா மும்பையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அவரும் படத்தில் இணையலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.