‘மணிகண்டன் நிச்சயம் அதைச் செய்வார்...’: புஷ்கர் காயத்ரி
மணிகண்டன் குறித்து புஷ்கர் காயத்ரி பேசியவை...
நடிகர் மணிகண்டனின் நடிப்புத் திறனை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி பாராட்டியுள்ளனர்.
குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய தொடர் வெற்றிகளால் நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.
இறுதியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக ரீதியாகவும் மணிகண்டனுக்கு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஓடிடியில் விடாமுயற்சி!
இந்த நிலையில், இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி நேர்காணல் ஒன்றில், “மணிகண்டனுக்கு உடம்பெல்லாம் திறமைதான். அவரின் வளர்ச்சியைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. விஜய் சேதுபதிக்கு பின் அதிக அறிமுக இயக்குநர்களுடன் நடித்தது மணிகண்டன்தான். எதார்த்தமான பையன்.
அவர் ஒரு கதை வைத்திருக்கிறார். அவரால் மட்டும்தான் அதை இயக்கி, நடிக்க முடியும். இப்போது பிஸியாகிவிட்டார் என்றாலும் எப்போதாவது அப்படத்தை பண்ணுவார். எங்களுக்கு மிகவும் பிடித்த கதை அது” எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.