இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!
நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.
நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.
தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். பின்னர் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது.
கீர்த்தி சனோன் நடிப்புக்காக மிமி படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். கடந்தாண்டு வெளியான டோ பட்டி எனும் படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
கதை வியக்க வைக்க வேண்டும்
ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனோன் பேசியதாவது:
இணையத்தொடரில் நடிக்க வேண்டுமெனில் அந்தக் கதை நடிகையாக என்னை வியக்க வைக்க வேண்டும். முற்றிலும் புதியதாக இருக்க வேண்டும். என்னெனில் அது படத்தைவிட நீளமாக இருக்கும். அதனால், அந்தளவுக்கு நீண்ட நேரத்தில் நடிக்க என் ஆர்வத்தை தூண்டும் கதையாக இருக்க வேண்டும்.
ஸ்ட்ரீ 2, சாவா ஆகிய படங்கள் வசூலில் அசத்தியது நல்ல விஷய்ம். நாம் நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.