நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்: விஷ்ணு விஷால்
சினிமா சம்பளம் குறித்து விஷ்ணு விஷால் பேச்சு...
நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைவாக வாங்க வேண்டுமென விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆர்யன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்களின் விற்பனையால் வணிக ரீதியாக வெற்றிப்படமானதாகவே தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், “ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை மட்டுமே சார்ந்தது அல்ல. திரைப்படம் நன்றாக இல்லை எனச் சொன்னால் நடிகர்களைத்தான் திட்டுகிறார்கள். சினிமாவைப் பொறுப்புடன் பார்ப்பதால், என் படங்களில் கதை தொடர்பான விஷயங்களில் தேவைப்படும் மாற்றங்களைச் சொல்வேன். அதனால்தான், என்னால் வெற்றிப்படங்களைக் கொடுக்க முடிகிறது.” என்றார்.
Advertisement
Advertisement
மேலும், “தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுப்பதால் புதிய தயாரிப்பாளர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு விஷ்ணு விஷால், “யாருக்கும் அறிவுரை வேண்டாம். ஆனால், என் பரிந்துரையைச் சொல்கிறேன். நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்து வாங்குங்கள். அப்படியிருந்தால் மட்டுமே படத்தின் உருவாக்கத்திற்குச் செலவு செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஓடிடியில் பேட் கேர்ள்!
actor vishnu vishal spokes about actors salaries in movies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.