நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருந்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு லோகா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்ததுடன் வணிக ரீதியாகவும் கல்யாணியின் சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது.
தற்போது, நடிகர் ரவி மோகனின் ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், நேரடித் தமிழ்ப் படமொன்றில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் திரவியம் இயக்க, பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
லோகா போல் இதிலும் முன்னணி கதை நாயகியாக கல்யாணி நடிக்க உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: சினிமாவிலிருந்து ஓய்வுபெறும் நடிகை துளசி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.