முகப்பு
செய்திகள்

ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!

நடிகர் கமலின் 237-ஆவது படம் குறித்து...

Updated On : 13 செப்டம்பர், 2025 at 7:09 AM
அன்பறிவ் சகோதரர்கள், கமல், ஷ்யாம் புஷ்கரன். - படம்: எக்ஸ் / ஆர்கேஎஃப்ஐ
பகிர்:

நடிகர் கமலின் 237-ஆவது படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

யார் இந்த அன்பறிவ் சகோதரர்கள்?

மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள்.

பின்னர் கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்று இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.

தங்களது முதல் படத்திலேயே கமலை இயக்குகிறார்கள். கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் 237-ஆவது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என கடந்த ஆண்டே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ஷ்யாம் புஷ்கரன், அன்பறிவ் சகோதரர்கள் உடன் கமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு பதிவிட்டுள்ளது.

யார் இந்த ஷ்யாம் புஷ்கரன்?

தேசிய விருது வென்ற மகேஷின்ட பிரதிகாரம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர்தான் ஷ்யாம் புஷ்கரன்.

தொண்டிமுதலும் த்ரிஷாக்சியும், கும்பலாங்கி நைட்ஸ், மாயநதி, தங்கம் படங்களுக்கும் இயக்குநருடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.

திரைக்கதை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் ஷ்யாம் புஷ்கரன் அசத்துகிறார். கும்பலாங்கி நைட்ஸ், பிரேமலு படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதும் கவனித்தக்கது.

தக் லைஃப் சுமாரான வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Malayalam screen writer Shyam Pushkaran has written the screenplay for kamal 237th film, which is directed by anbariv brothers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.