முகப்பு
செய்திகள்

மக்கள் மனம் கவர்ந்த நடிகை! விருது வென்றார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்!

சின்ன திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதை நடிகை சரண்யா பெற்றுள்ளது குறித்து....

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:15 AM
விருதுடன் சரண்யா துராடி - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் தங்கமயில் பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சரண்யா துராடி, சின்ன திரையில் மக்கள் மனம் கவர்ந்த நடிகை என்ற விருதை வென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நட்சத்திரங்கள், சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சரண்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

சகோதர பாசத்தை அடிப்படையாகக் கொண்டுமுதல் பாகம் எடுக்கப்பட்ட நிலையில், தந்தை - மகன்கள் பாசத்தை வைத்து இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடரில் நிரோஷா, ஸ்டாலின் முத்து, வி.ஜே. கதிர்வேல், சரண்யா துராடி, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், ஆகாஷ் பிரேம்குமார், ஷாலினி பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

எதார்த்தமான பாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருவதால், பலரால் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 உள்ளது. இதுவே பலதரப்பட்ட ரசிகர்களை இத்தொடருக்கு பெற்றுக்கொண்டுத்துள்ளது.

சரண்யா துராடியும் விருதும்

இந்நிலையில், சின்ன திரையில் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள் மனம் கவர்ந்த நடிகை என்ற பிரிவில் சரண்யா துராடி விருது வென்றுள்ளார். இந்தியன் அவார்ட்ஸ் இந்த விருதை வழங்கியுள்ளது.

விருது பெற்ற புகைப்படங்களையும் விடியோவையும் ரசிகர்களுடன் சரண்யா பகிர்ந்துள்ளார். சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

summary

Vijay tvs Pandian Stores 2 sharanya turadi won favorite actress award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.