ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி
ஏஐ குறித்து கிருத்தி ஷெட்டி...
நடிகை கிருத்தி ஷெட்டி ஏஐ தொழில்நுட்பம் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டி, “சமூக வலைதளங்களில் எது உண்மை, எது பொய் எனக் கண்டறிய முடியாத அளவுக்கு ஏஐயின் வளர்ச்சி கவலையளிக்கிறது. என்னுடன், ஆண் ஒருவர் நெருக்கமாக இருப்பதைப் போன்ற போலி ஏஐ புகைப்படத்தைக் கண்ட என் அம்மா அதிர்ச்சிக்குள்ளாகினார். பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? இதை எப்படி கட்டுப்படுத்துவது?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
actor kriti shetty shares her thoughts on ai and fake images
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.