சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!
சின்ன திரை நடிகை ரேஷ்மா முரளிதரனின் புதிய பட அறிவிப்பு குறித்து...
சின்ன திரையில் முன்னணி நடிகையான ரேஷ்மா முரளிதரன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இவர் நடிக்கவுள்ள படத்தில் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவரின் ரசிகர்கள் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்ன திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அபி டெய்லர், விஜய் தொலைக்காட்சியின் கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
Advertisement
Advertisement
சமீபத்தில் ஜீ தமிழின் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனாலும் வசீகரமான தோற்றத்தாலும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர்.
இவர் நடிக்கும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதால், சமூக வலைதளங்களில் ரேஷ்மாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செல்லமே செல்லமே தொடரில் ரேஷ்மா நாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் தொடர்கள் அடுத்தடுத்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார்.
காளி வெங்கட், ஜேசன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் ரேஷ்மா முரளிதரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இப்படத்தை இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரேஷ்மாவின் ரசிகர்கள் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Reshma Muralidharan makes her cinematic debut, transitioning from TV serials!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.