முகப்பு
செய்திகள்

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!

கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதி வாக்களித்தது குறித்து...

Updated On : 23 ஏப்ரல் 2026, 3:07 pm IST
பகிர்:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(ஏப். 23) நடைபெற்று வரும் நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் வாக்களித்தது குறித்து பதிவிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் எப்போது சுறுசுறுப்புடன் இருப்பவர் நடிகை கண்மணி மனோகரன். இவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்ட சின்ன திரை நடிகைகளில் இவரும் ஒருவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடிகை கண்மணி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இதனிடையே, நடிகை கண்மணி மனோகரன் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் இன்று(ஏப். 23) தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள்.

இது தொடர்பான கண்மணி மனோகரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “கான்ஃபிடன்டா இருங்க... நல்லதே நடக்கும்... வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார். கண்மணி, அஷ்வத் தம்பதியினர் வெள்ளை சர்ட், காக்கி பேன்ட் அணிந்து இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

summary

As the Legislative Assembly elections are underway in Tamil Nadu today (April 23), the couple Kanmani Manoharan and Ashwath have subtly hinted at whom they voted for.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.