சாய் பல்லவியால் தாமதமாகும் சுப்புலட்சுமி படப்பிடிப்பு?
சுப்புலட்சுமி பயோபிக் குறித்து...
நடிகை சாய் பல்லவியால் சுப்புலட்சுமி திரைப்பட பணிகள் தாமதமாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கில் தன் வணிகத்தை பலமாக வைத்திருப்பவர் தற்போது ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகி வருகிறது.
இதற்கிடையே, மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
Advertisement
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகாமல் இருந்ததால் இதிலிருந்து சாய் பல்லவி விலகியதாகக் கூறப்பட்டது.
ஆனால், சாய் பல்லவி விலகவில்லை என்றும் ராமாயணா படத்திற்காக அதிக நாள்களை ஒதுக்கியதால் சுப்புலட்சுமி படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்க முடியாமல் இருப்பதாகத் தயாரிப்பு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாய் பல்லவி ராமாயணாவை முடித்துவிட்டு வந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.