அன்பும் நிறைவும்..! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பாராட்டிய கார்த்தி!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பாராட்டிய கார்த்தி....
நடிகர் கார்த்தி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் முதல்நாள் முதல் காட்சியைக் கண்டனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல குடும்பத் திரைப்படம் என்கிற விமர்சனங்களை அதிகம் பெற்று வருவதால் இப்படமும் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் கார்த்தி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அதில், “வெங்கி அட்லூரி என்ன ஒரு எழுத்து... அழகான கதாபாத்திரங்களின் அட்டகாசமான நடிப்புகள். படம் முழுவதும் இதயம் நிறைந்த அன்புடன் உங்களைப் புன்னகைக்க வைப்பதுடன் மீண்டும் படத்தைப் பார்க்க வைக்கும். உன் நடிப்பு ஆஹா எனச் சொல்ல வைக்கிறது பா (சூர்யா)! மமிதா பைஜூ சூப்பர். ராதிகா அக்கா மனதைக் கவரும் நடிப்பு.” எனப் பாராட்டியுள்ளார்.
Actor Karthi has praised the movie Vishwanath & Sons.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.