FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓணம் கொண்டாட்டம்... அசின் பகிர்ந்த தனது மகளின் அரிதான புகைப்படங்கள்!

நடிகை அசின் பகிர்ந்த தனது மகளின் புகைப்படங்கள் குறித்து...

நடிகை அசின் மகளின் புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / சிம்ப்ளி அசின்.
பகிர்:

ஓணம் கொண்டாட்டத்தையொட்டி நடிகை அசின் பகிர்ந்த தனது மகளின் அரிதான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை அசின் தமிழில் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். பின்னர், நடிகர்கள் விஜய் - அஜித்துடன் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வராக இருக்கும் விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

ராகுல் சர்மா என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு2017ல் ஒரு மகள் பிறந்தார். அவரது பெயர் அரின். 8 வயதாகும் இந்த மகளின் புகைப்படத்தை நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகை அசின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அசின் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சள் நிற ஆடையுடன் அசினின் மகள் பூக்களை அடுக்கும் காட்சிகள் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகியுள்ளார். பொதுவெளியில் திரைப்பட விளம்பரங்களில் கலந்துகொள்வதிலும் தவிர்த்து வருகிறார். கடைசியாக தமிழில் காவலன் படத்திலும் ஆல் இஸ் வெல் என்ற ஹிந்திப் படத்திலும் நடித்திருந்தார்.

summary

'Ghajini' actor Asin shares rare pics of daughter Arin making Onam Pookalam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments