வளருங்கப்பா... புரளிக்கு பிரகாஷ் ராஜ் பதில்!
ஸ்பிரிட் திரைப்படம் குறித்து பிரகாஷ் ராஜ்...
நடிகர் பிரகாஷ் ராஜ் ஸ்பிரிட் திரைப்படம் குறித்த புரளிக்கு பதிலளித்துள்ளார்.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடிகர் பிரகாஷ் கூட்டணியில் மிகப் பிரம்மாண்ட பொருள்செல்வில் ஸ்பிரிட் திரைப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பும் துவங்கியுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரகாஷ் ராஜ் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் புரளிகள் கிளம்பின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “போலிச் செய்திகளைப் பரப்பும் வியாபாரிகளே... ஸ்பிரிட் திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள், உங்கள் வாட்ஸ் ஆப் கதைகள் பரவ ஆரம்பித்துவிட்டன. வளருங்கப்பா” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.