வளருங்கப்பா... புரளிக்கு பிரகாஷ் ராஜ் பதில்!
ஸ்பிரிட் திரைப்படம் குறித்து பிரகாஷ் ராஜ்...
நடிகர் பிரகாஷ் ராஜ் ஸ்பிரிட் திரைப்படம் குறித்த புரளிக்கு பதிலளித்துள்ளார்.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடிகர் பிரகாஷ் கூட்டணியில் மிகப் பிரம்மாண்ட பொருள்செல்வில் ஸ்பிரிட் திரைப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பும் துவங்கியுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரகாஷ் ராஜ் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் புரளிகள் கிளம்பின.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “போலிச் செய்திகளைப் பரப்பும் வியாபாரிகளே... ஸ்பிரிட் திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள், உங்கள் வாட்ஸ் ஆப் கதைகள் பரவ ஆரம்பித்துவிட்டன. வளருங்கப்பா” எனத் தெரிவித்துள்ளார்.