பொங்கல் வெளியீட்டில் இணைந்த ஜீவா!
தலைவர் தம்பி தலைமையில் வெளியீட்டுத் தேதி...
செய்திகள்பொங்கல் வெளியீட்டில் இணைந்த ஜீவா!
தலைவர் தம்பி தலைமையில் வெளியீட்டுத் தேதி...
நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.
இதில், நாயகியாக பிரார்தனாவும் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஜன. 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வெளியீடாக வருகிற ஜன. 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 14 அன்று நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.