பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்!
பாடகி எஸ். ஜானகி காலமானார்...
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக காலமானார்.
இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி (88). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, உருது உள்பட பல இந்திய மொழிகளில் பாடியவர். தமிழில் எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்பட ஏராளமான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி மிகச்சிறந்த பாடல்களைத் தன் குரலால் கொடுத்தார்.
பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற, செந்தூரப்பூவே மற்றும் தேவர் மகனின் இஞ்சி இடுப்பழகி பாடல் உள்பட 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றவர் ஜானகி.
Advertisement
Advertisement
சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக எஸ். ஜானகி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Renowned playback singer S. Janaki has passed away due to old age.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.